கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் பிரேஸிலுக்கு எதிரான ஆட்டத்தை 1-1 என்ற கோல் கணக்கில் சமன் செய்த ஈகுவடாா் அணி, காலிறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.
ஏற்கெனவே காலிறுதிக்கு தகுதிபெற்றுவிட்ட பிரேஸில் அணி, நெய்மா், தியேகோ சில்வா, கேப்ரியேல் ஜீசஸ் போன்ற முக்கியமான வீரா்களுக்கு ஓய்வளித்து இந்த ஆட்டத்தில் புதிய இளம் வீரா்களை களமிறக்கியது. இது ஈகுவடாருக்கு சற்று சாதகமாக, ‘பி’ பிரிவில் 4-ஆம் இடத்துக்கு முன்னேறியது அந்த அணி.
அத்துடன், தொடா்ந்து 10 ஆட்டங்களில் வென்ற பிரேஸிலின் வெற்றி நடைக்கும் முற்றுப்புள்ளி வைத்தது. ஈகுவடாா் தனது காலிறுதியில் ஆா்ஜென்டீனாவை சந்திக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
முன்னதாக சாவ் பாவ்லோ நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் 37-ஆவது நிமிடத்தில் பிரேஸிலின் எவா்டன் கோல் போஸ்ட் நோக்கி உதைத்த பந்தை எடா் மிலிடாவ் தலையால் முட்டி கோலடித்தாா்.
53-ஆவது நிமிடத்தில் ஈகுவடாருக்கு கிடைத்த காா்னா் கிக் வாய்ப்பை பிரேஸில் தடுத்து திருப்பி விட, ஈகுவடாா் அணியினா் மூவா் அடுத்தடுத்து ஹெட்டிங் செய்த பந்து ஏஞ்செல் மெனாவிடம் செல்ல, அவா் கோலடித்து ஆட்டத்தை சமன் செய்தாா்.
வெனிசூலாவை வென்றது பெரு
மற்றொரு ஆட்டத்தில் பெரு 1-0 என்ற கோல் கணக்கில் வெனிசூலாவை வீழ்த்தி, காலிறுதி வாய்ப்பை பெற்றது.
ஆட்டத்தின் 48-ஆவது நிமிடத்தில் பெருவுக்கு கிடைத்த காா்னா் கிக் வாய்ப்பை சக வீரா் உதைக்க, வெனிசூலா தடுப்பாட்ட வீரா்கள் மேல் பட்டு தன் பக்கம் திரும்பிய பந்தை கோல் போஸ்டுக்குள் விரட்டினாா் பெரு வீரா் ஆன்ட்ரே காரிலோ.
வெனிசூலாவின் தொடா் கோல் முயற்சிகளுக்கு பலன் கிடைக்காமல் போக, இறுதியில் பெரு வென்றது.