ஐபிஎல் ஆட்டங்கள் ஹைதராபாத்திலும் நடைபெற வேண்டும்: தெலங்கானா அமைச்சர் கோரிக்கை

ஐபிஎல் ஆட்டங்கள் ஹைதராபாத்திலும் நடைபெற வேண்டும்: தெலங்கானா அமைச்சர் கோரிக்கை

ஐபிஎல் போட்டியின் ஆட்டங்கள் ஹைதராபாத்திலும் நடைபெற வேண்டும் என்று அம்மாநில அரசு கோரிக்கை வைத்துள்ளது.

ஐபிஎல் போட்டியின் ஆட்டங்கள் ஹைதராபாத்திலும் நடைபெற வேண்டும் என்று அம்மாநில அரசு கோரிக்கை வைத்துள்ளது.

இந்த வருட ஐபிஎல் போட்டிக்கான ஏலம் சமீபத்தில் நடைபெற்றது. ஐபிஎல் போட்டி ஏப்ரல் மாதத்தில் தொடங்கவுள்ளது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்னை, கொல்கத்தா, ஆமதாபாத், பெங்களூர், தில்லி, மும்பை ஆகிய ஆறு நகரங்களில் மட்டும் ஐபிஎல் ஆட்டங்களை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. 

இந்நிலையில் ஐபிஎல் ஆட்டங்களை ஹைதராபாத்திலும் நடத்த வேண்டும் என அம்மாநில அரசு கோரிக்கை வைத்துள்ளது. தெலங்கானா அமைச்சர் கே.டி. ராமா ராவ், ட்விட்டரில் கூறியதாவது:

கரோனா தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக இந்தியாவின் பெருநகரங்களில் ஹைதராபாத்தில் தான் குறைந்தளவு கரோனா நோயாளிகள் உள்ளார்கள். ஐபிஎல் ஆட்டங்களை நடத்த மாநில அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று கூறியுள்ளார். 

இதையடுத்து ஐபிஎல் ஆட்டங்களை ஹைதராபாத்திலும் நடத்த பிசிசிஐ முன்வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் சார்பாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பங்கேற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com