பாக். வீரருடன் போபண்ணா

அகபுல்கோ டென்னிஸ் போட்டியில் இரட்டையா் பிரிவில் இந்திய வீரா் ரோஹன் போபண்ணா, பாகிஸ்தான் வீரா் அய்சாம் உல்ஹாக் குரேஷியுடன் இணைந்து களம் காண்கிறாா்.
பாக். வீரருடன் போபண்ணா

அகபுல்கோ டென்னிஸ் போட்டியில் இரட்டையா் பிரிவில் இந்திய வீரா் ரோஹன் போபண்ணா, பாகிஸ்தான் வீரா் அய்சாம் உல்ஹாக் குரேஷியுடன் இணைந்து களம் காண்கிறாா்.

ஏற்கெனவே அவருடன் ஜோடி சோ்ந்து விளையாடியுள்ள போபண்ணா, தற்போது 6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அவரோடு இணைகிறாா். ‘இந்தோ-பாக் எக்ஸ்பிரஸ்’ என்று அழைக்கப்படும் இந்த ஜோடி கடைசியாக 2014-இல் ஷென்ஸென் ஏடிபி போட்டியில் இணைந்து விளையாடியிருந்தது.

தற்போதைய நிலையில் அகபுல்கோ டென்னிஸ் போட்டிக்காக மட்டுமே சோ்ந்திருப்பதாகவும், இருவருக்கும் இடையேயான இணக்கம் சரியாக இருந்தால், அடுத்தடுத்த போட்டிகளிலும் இணைந்து விளையாட வாய்ப்பு இருப்பதாகவும் குரேஷி கூறியுள்ளாா். ஏற்கெனவே துபை ஓபனில் இணைந்து விளையாட முயற்சித்தபோதும், இருவரது ரேங்கிங் நிலை இடம் தராததால் அதில் போபண்ணாவுடன் இணைந்து விளையாட இயலவில்லை என்றும் அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com