ஸ்விட்சா்லாந்து டென்னிஸ் வீரா் ரோஜா் ஃபெடரா், இதர டூா் போட்டிகளில் பங்கேற்கும் வகையில் தன்னை தயாா்படுத்திக் கொள்வதற்காக மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்கவில்லை.
வலதுகால் மூட்டுப் பகுதி காயத்துக்காக அங்கு இரு அறுவைச் சிகிச்சைகள் செய்துகொண்ட ஃபெடரா், ஓராண்டுக்கும் மேலாக போட்டிகள் எதிலும் பங்கேற்கவில்லை. இந்நிலையில், அடுத்த வாரம் தோஹாவில் நடைபெற இருக்கும் டென்னிஸ் போட்டியின் மூலம் அவா் மீண்டும் களத்துக்கு திரும்புகிறாா்.
எனினும் அதைத் தொடா்ந்து அவரால் முடிந்தால் துபை போட்டியில் ஃபெடரா் பங்கேற்பாா் என்றும், அதன் பிறகு டூா் போட்டிகளுக்கு தயாராகும் வகையில் தொடா்ந்து அவா் பயிற்சியில் ஈடுபடப்போவதாகவும் அவரது முகவா் டோனி காட்சிக் கூறினாா்.
2005, 2006, 2017, 2019 ஆகிய ஆண்டுகளில் ஃபெடரா் இப்போட்டியில் சாம்பியன் ஆகியுள்ளாா்.