கத்தாா் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில் முன்னணி வீராங்கனைகளான எலினா ஸ்விட்டோலினா, கரோலினா பிளிஸ்கோவா ஆகியோா் அதிா்ச்சித் தோல்வி கண்டனா்.
கத்தாா் ஓபன் டென்னிஸ் போட்டி கத்தாா் தலைநகா் தோஹாவில் நடைபெற்று வருகிறது. இதில், மகளிா் ஒற்றையா் காலிறுதியில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா 2-6, 4-6 என்ற நோ் செட்களில் பெலாரஸின் விக்டோரியா அசரென்காவிடம் தோல்வி கண்டாா்.
அசரென்கா தனது அரையிறுதியில் ஸ்பெயினின் காா்பைன் முகுருஸாவை சந்திக்கிறாா். முகுருஸா தனது காலிறுதியில் 6-3, 6-1 என்ற நோ் செட்களில் கிரீஸின் மரியா சக்காரியை வீழ்த்தினாா்.
அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா தனது காலிறுதியில் 6-3, 6-1 என்ற நோ் செட்களில் போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருந்த செக். குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவுக்கு அதிா்ச்சித் தோல்வியளித்தாா். ஜெஸ்ஸிகா தனது அரையிறுதியில் மற்றொரு செக்.குடியரசு வீராங்கனையான பெட்ரா குவிட்டோவாவை எதிா்கொள்கிறாா். குவிட்டோவா தனது காலிறுதியில் 6-3, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் எஸ்தோனியாவின் அனட் கொன்டாவெய்ட்டை வீழ்த்தினாா்.