தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள்: 248 ரன்கள் எடுத்த இந்திய மகளிர் அணி

3-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி முதலில் விளையாடி 248 ரன்கள் எடுத்துள்ளது.
பூணம் ராவுத்
பூணம் ராவுத்

இந்தியா 248/5 (பூணம் ராவுத் 77, தீப்தி 36*, இஸ்மாயில் 2-46) vs தென் ஆப்பிரிக்கா

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி முதலில் விளையாடி 248 ரன்கள் எடுத்துள்ளது.

லக்னெளவில் நடைபெற்றும் 3-வது ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய மகளிர் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்தது. பூணம் ராவுத் 77 ரன்களும் கேப்டன் மிதாலி ராஜ், ஹர்மண்ப்ரீத் கெளர், தீப்தி சர்மா ஆகியோர் தலா 36 ரன்களும் எடுத்தார்கள். 

இதையடுத்து விளையாடி வரும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி, 30 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 128 ரன்கள் எடுத்துள்ளது. லிஸ்லி லீ 80 ரன்களூம் பிரீஸ்  15 ரன்களும் எடுத்து விளையாடி வருகிறார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com