இந்தியா 248/5 (பூணம் ராவுத் 77, தீப்தி 36*, இஸ்மாயில் 2-46) vs தென் ஆப்பிரிக்கா
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி முதலில் விளையாடி 248 ரன்கள் எடுத்துள்ளது.
லக்னெளவில் நடைபெற்றும் 3-வது ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய மகளிர் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்தது. பூணம் ராவுத் 77 ரன்களும் கேப்டன் மிதாலி ராஜ், ஹர்மண்ப்ரீத் கெளர், தீப்தி சர்மா ஆகியோர் தலா 36 ரன்களும் எடுத்தார்கள்.
இதையடுத்து விளையாடி வரும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி, 30 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 128 ரன்கள் எடுத்துள்ளது. லிஸ்லி லீ 80 ரன்களூம் பிரீஸ் 15 ரன்களும் எடுத்து விளையாடி வருகிறார்கள்.