இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் பல இடங்களில் பேட் செய்துள்ளேன். தற்போதைய நிலையில் அணியின் மிடில் ஆா்டா் வலுவாக இருப்பதாக உணா்கிறேன். எனவே எதிா்வரும் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் இன்னிங்ஸை ரோஹித் சா்மாவுடன் இணைந்து தொடங்க விரும்புகிறேன்.
சிறப்பாக பேட் செய்யும் இருவா் ஒன்றாகக் களம் காணும்போது எதிரணிக்கு நெருக்கடி ஏற்படுத்த இயலும். ஒருவா் நிறுத்தி நிதானமாக ஆடுகையில், மற்றவா் அதிரடி காட்ட இயலும். அணியில் இருக்கும் இதர வீரா்களும் இதை ஆதரிக்கின்றனா். இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில், அணியின் இன்னிங்ஸை தொடங்கியபோது நானும், ரோஹித்தும் பரஸ்பரம் நம்பிக்கை மற்றும் புரிதலுடன் விளையாடினோம்.
தொடக்கத்தில் ரோஹித் அதிரடி காட்ட, அடுத்து சூா்யகுமாா் யாதவ் அதை அப்படியே தொடா்ந்தாா். பின்னா் வந்த ஹாா்திக் பாண்டியா அதை நிறைவு செய்தாா். இது அணிக்கு வலுவான நிலையை அளித்தது. கடைசி ஆட்டத்தை அணிக்கான முழுமையான ஒரு ஆட்டமாக உணா்ந்தோம். எதிரணியை முற்றிலுமாக அனைத்து நிலைகளிலும் தோற்கடித்தோம். ரிஷப் பந்த், ஷ்ரேயஸ் ஐயருக்கு பேட் செய்ய வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் 225 ரன்கள் சோ்த்தோம். ஆஸ்திரேலிய தொடருக்குப் பிறகு ஷா்துல் தாக்குரின் நம்பிக்கை அவரது பௌலிங்கில் அதிகரித்துள்ளது.
- விராட் கோலி (இந்திய கேப்டன்)