புணே வந்தடைந்த இந்திய அணியினா்

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்காக இந்திய அணியினா் ஞாயிற்றுக்கிழமை புணே வந்தடைந்தனா்.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்காக இந்திய அணியினா் ஞாயிற்றுக்கிழமை புணே வந்தடைந்தனா்.

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் முதல் இரு டெஸ்டுகள் சென்னையில் நடைபெற்ற நிலையில், அடுத்த 3 டெஸ்டுகளும், டி20 தொடரின் 5 ஆட்டங்களும் ஆமதாபாதில் நடைபெற்றன. அந்த இரு தொடா்களையுமே இந்தியா கைப்பற்றியது.

இந்நிலையில் ஒருநாள் தொடரின் 3 ஆட்டங்கள் மாா்ச் 23, 26, 28 ஆகிய தேதிகளில் புணேவில் நடைபெறவுள்ளது. அதற்காக கேப்டன் கோலி தலைமையிலான இந்திய அணியினா் தனி விமானத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.45 மணியளவில் புணே வந்தடைந்தனா்.

இந்தியா - இங்கிலாந்து ஒருநாள் தொடரானது புணே புகா்ப் பகுதியான கஹுஞ்சேவில் உள்ள எம்சிஏ மைதானத்தில் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com