விளையாட்டு செய்தித் துளிகள்

* கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டா்கள் வாங்குவதற்காக ரூ.20 லட்சம் நிதியுதவி அளித்துள்ளாா் இந்திய கிரிக்கெட் வீரா் ஷிகா் தவன்.

* இந்தியாவில் வரும் அக்டோபா் மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கு 9 நகரங்கள் தோ்வு செய்யப்பட்டிருந்த நிலையில், கரோனா தொற்று காரணமாக அதை 4 அல்லது 5 ஆக குறைக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

* ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஊதியத்தில் 10 சதவீதத்தை கரோனா தடுப்பு பணிகளுக்கு வழங்குவதாக ராஜஸ்தான் ராயல்ஸ் வேகப்பந்து வீச்சாளா் ஜெயதேவ் உனட்கட் தெரிவித்துள்ளாா்.

* ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நடைபெற்று வரும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிா் ஒற்றையா் முதல் சுற்றில் ஜப்பானின் நயோமி ஒசாகா 7-5, 6-2 என்ற நோ் செட்களில் சகநாட்டவரான மிசாகி தோயை வீழ்த்தி 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com