இங்கிலாந்து, கேகேஆர் அணிகளுக்காக விளையாடிய வீரர் ஓய்வு அறிவிப்பு

ஐபிஎல் போட்டியில் விளையாடிய இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஹாரி கர்னி ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இங்கிலாந்து, கேகேஆர் அணிகளுக்காக விளையாடிய வீரர் ஓய்வு அறிவிப்பு


ஐபிஎல் போட்டியில் விளையாடிய இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஹாரி கர்னி ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

2014-ல் இங்கிலாந்து அணிக்காக 10 ஒருநாள், 2 டி20 ஆட்டங்களில் விளையாடியவர் ஹாரி கர்னி. 2019 ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக 8 ஆட்டங்களில் விளையாடி 7 விக்கெட்டுகளை எடுத்தார். 

இந்நிலையில் தன்னுடைய ஓய்வு அறிவிப்பை ஹாரி கர்னி வெளியிட்டுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:

கடந்த 24 வருடங்களாக கிரிக்கெட் தான் என் வாழ்க்கை. அது எனக்கு அற்புதமான பயணத்தை அளித்ததை எப்போதும் மறக்க முடியாது. இங்கிலாந்து, ஐபிஎல் அணிகளுக்காக விளையாடியதும் சொந்த மண்ணிலும் வெளிநாட்டிலும் பிளாஸ்ட், பிக் பாஷ், சிபிஎல் போட்டிகளை வென்றதும் என் கனவுகளைத் தாண்டி நிகழ்ந்த சாதனைகள் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com