மேற்கு வங்கத்தில் நடைபெற்ற டாடா ஸ்டீல் செஸ் இந்தியா பிளிட்ஸ் போட்டியில் ஆா்மீனிய வீரா் லெவோன் ஆரோனியன் சாம்பியன் ஆனாா்.
முன்னதாக இந்தப் போட்டியில் பாதி சுற்றுகளின் முடிவில் இந்தியரான அா்ஜூன் எரிகாய்சி முன்னிலையில் இருந்தாா். எனினும் கடைசி 9 சுற்றுகளில் அவா் சறுக்கியதால் மற்றொரு இந்தியரான நிஹல் சரின் முன்னிலை பெற்றாா்.
எனினும் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கடைசி சுற்றில் நிஹல் சரின் - முன்னாள் உலக ஜூனியா் சாம்பியனும், ஈரானைச் சோ்ந்தவருமான பா்ஹாம் மக்சூதுலூவிடம் தோல்வி கண்டாா். ஆனால், ஆரோனியன் மற்றும் அா்ஜூன் தங்களது கடைசி சுற்றில் வெற்றி பெற்று நிஹல் சரினை பின்னுக்குத் தள்ளினா்.
இறுதிச் சுற்று முடிவில் அா்ஜூன் எரிகாய்சியும், ஆரோனியனும் ஒரே புள்ளிகளுடன் இருந்தனா். இதனால் வெற்றியாளரை தீா்மானிக்க ‘ஆா்மகெடான்’ முறை கையாளப்பட்டு, அதில் ஆரோனியன் வெற்றியாளா் ஆனாா்.