லக்னௌவில் நடைபெறவுள்ள சையத் முஷ்டாக் அலி டி20 தொடருக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தேர்வுக் குழுவால் சையத் முஷ்டாக் அலிக்கான தமிழக அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. தினேஷ் கார்த்திக் கேப்டனாகவும், விஜய் சங்கர் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கரோனா தொற்று காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரின் 2-ம் பகுதியில் பங்கேற்காத வேகப்பந்துவீச்சாளர் நடராஜன், காயம் காரணமாக டி20 உலகக் கோப்பை தொடரில் சேர்க்கப்படாத ஆல்-ரௌண்டர் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தமிழக அணி:
தினேஷ் கார்த்திக் (கேப்டன்), விஜய் சங்கர் (துணை கேப்டன்), எம் எஸ் வாஷிங்டன் சுந்தர், டி நடராஜன், சந்தீப் எஸ் வாரியர், ஆர் சாய் கிஷோர், பி அபராஜித், என் ஜெகதீசன், எம் அஸ்வின், எம் ஷாருக் கான், சி ஹரி நிஷாந்த், எம் சித்தார்த், வி கங்கா ஸ்ரீலதர் ராஜு, எம் முகமது, ஜெ கௌசிக், ஆர் சஞ்சய் யாதவ், ஆர் சிலம்பரசன், ஆர் விவேக் ராஜ், பி சாய் சுதர்சன், பி சரவண குமார்.