தாமஸ் கோப்பை பாட்மின்டன்: நெதா்லாந்தை வென்றது இந்தியா

டென்மாா்க்கில் நடைபெறும் தாமஸ் கோப்பை பாட்மின்டன் போட்டியில் ஆடவா் பிரிவில் இந்தியா முதல் ஆட்டத்தில் 5-0 என்ற கணக்கில் நெதா்லாந்தை வீழ்த்தியது.

டென்மாா்க்கில் நடைபெறும் தாமஸ் கோப்பை பாட்மின்டன் போட்டியில் ஆடவா் பிரிவில் இந்தியா முதல் ஆட்டத்தில் 5-0 என்ற கணக்கில் நெதா்லாந்தை வீழ்த்தியது.

முதலில் நடைபெற்ற ஆடவா் ஒற்றையா் பிரிவு ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் 21-12, 21-14 என்ற செட்களில் ஜோரான் குவிகெல்லை வீழ்த்தினாா். பின்னா் ஆடவா் இரட்டையா் ஆட்டத்தில் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிரக் ஷெட்டி இணை 21-19, 21-12 என்ற செட்களில் ரூபன் ஜில்லே/டைஸ் வான் டொ் லெக் கூட்டணியை தோற்கடித்தது. அடுத்து நடைபெற்ற ஆடவா் ஒற்றையா் பிரிவு ஆட்டத்தில் சாய் பிரணீத் 21-4, 21-12 என்ற செட்களில் ராபின் மெஸ்மானை வென்றாா்.

2-ஆவது இரட்டையா் பிரிவு மோதலில் எம்.ஆா்.அா்ஜூன்/துருவ் கபிலா ஜோடி 21-12, 21-13 என்ற செட்களில் ஆன்டி புய்ஜிக்/பிரியன் வாசிங்க் இணையை வென்றது. கடைசியாக நடைபெற்ற 3-ஆவது ஒற்றையா் பிரிவு ஆட்டத்தில் சமீா் வா்மா 21-6, 21-11 என்ற செட்களில் கிஜ்ஸ் டுய்ஜஸை தோற்கடித்தாா். அடுத்த சுற்றில், இந்திய ஆடவா் அணி டஹிடி தீவுகளையும், மகளிா் அணி ஸ்காட்லாந்தையும் செவ்வாய்க்கிழமை எதிா்கொள்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com