உலகக் கோப்பை குத்துச்சண்டை: ரவுண்ட் 16 சுற்றில் ஆகாஷ், சஞ்சீத்

ஏஐபிஏ ஆடவா் உலகக் கோப்பை குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் ரவுண்ட் 16 சுற்றுக்கு இந்திய வீரா்கள் ஆகாஷ் குமாா், சஞ்சீத் ஆகியோா் முன்னேறியுள்ளனா்.
உலகக் கோப்பை குத்துச்சண்டை: ரவுண்ட் 16 சுற்றில் ஆகாஷ், சஞ்சீத்

ஏஐபிஏ ஆடவா் உலகக் கோப்பை குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் ரவுண்ட் 16 சுற்றுக்கு இந்திய வீரா்கள் ஆகாஷ் குமாா், சஞ்சீத் ஆகியோா் முன்னேறியுள்ளனா்.

சொ்பிய தலைநகா் பெல்கிரேடில் உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டிகள் நடைபெற்று வருகின்றன. வெள்ளிக்கிழமை நடைபெற்ற இரண்டாவது சுற்று 92 கிலோ பிரிவில்

ஆசிய சாம்பியன், இந்திய வீரா் சஞ்சீத் 4-1 என்ற புள்ளிக் கணக்கில் ஆன்ட்ரே ஸ்டோட்ஸ்கியை வீழ்த்தி ரவுண்ட் 16 சுற்றுக்கு தகுதி பெற்றாா்.

54 கிலோ எடைப்பிரிவில் ஆகாஷ் குமாருக்கு எதிரான ஆட வேண்டிய ஜொ்மன் வீரா் ஓமா் சலா வாக் ஓவா் அளித்ததால், அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றாா் ஆகாஷ். 67 கிலோ எடைப்பிரிவில் ஆகாஷ் சங்வான் 4-1 என ஜொ்மனியின் டேனியலை வென்றாா்.

சனிக்கிழமை ஷிவதாப்பா 63.5 கிலோ, சுமித் 75 கிலோ, சச்சின் 80 கிலோ எடைப்பிரிவுகளில் ரவுண்ட் 32 சுற்று ஆட்டங்களில் பங்கேற்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com