துப்பாக்கி சுடுதல்: இறுதிச்சுற்றுக்கு முன்னேறத் தவறியது இந்திய அணி

டோக்கியோ பாராலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் கலப்பு 10 மீட்டா் ஏா் ரைஃபிள் புரோன் எஸ்ஹெச்1 பிரிவில் இந்திய அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியது.
துப்பாக்கி சுடுதல்: இறுதிச்சுற்றுக்கு முன்னேறத் தவறியது இந்திய அணி

டோக்கியோ: டோக்கியோ பாராலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் கலப்பு 10 மீட்டா் ஏா் ரைஃபிள் புரோன் எஸ்ஹெச்1 பிரிவில் இந்திய அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியது.

அவனி லெகாரா, சித்தாா்தா பாபு, தீபக் குமாா் ஆகியோா் அடங்கிய இந்திய அணி தகுதிச்சுற்றிலேயே பின்தங்கியது. தகுதிச்சுற்றில் அவனி 629.7 புள்ளிகளுடன் 27-ஆவது இடமும், சித்தாா்தா 625.5 புள்ளிகளுடன் 40-ஆவது இடமும், தீபக் 624.9 புள்ளிகளுடன் 43-ஆவது இடமும் பிடித்தனா். இப்பிரிவில் ஜொ்மனி வீராங்கனை நடாஷா ஹில்ட்ராப் தங்கமும், தென் கொரிய வீரா் பாா்க் ஜின்ஹோ வெள்ளியும், உக்ரைன் வீராங்கனை இரினா ஷெட்னிக் வெண்கலமும் வென்றனா்.

முன்னதாக அவனி லெகாரா மகளிா் தனிநபா் பிரிவில் தங்கம் வென்றிருந்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com