பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிஸ்பா-உல்-ஹக் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் திங்கள்கிழமை ராஜிநாமா செய்தனர்.
ராஜிநாமா முடிவை இருவரும் திங்கள்கிழமை காலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் அவர்கள் தெரிவித்தனர்.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் ஆட்டங்கள் மற்றும் 5 டி20 ஆட்டங்களில் விளையாட செப்டம்பர் 11-ம் தேதி பாகிஸ்தான் வருகின்றனர். இதற்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி செப்டம்பர் 8-ம் தேதி இஸ்லாமாபாத்தில் கூடுகிறது. இந்த நிலையில் தலைமைப் பயிற்சியாளர் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் பொறுப்புகளிலிருந்து முறையே மிஸ்பா மற்றும் வக்கார் விலகியிருப்பது சிக்கலை உண்டாக்கியது.
இதையும் படிக்க | டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தான் அணி அறிவிப்பு, மூத்த வீரர்கள் நீக்கம்!
இதனால், நியூசிலாந்து தொடர்களுக்கு முன்னாள் வீரர்கள் சக்லைன் முஷ்டக் மற்றும் அப்துல் ரசாக் இடைக்காலப் பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மிஸ்பா-உல்-ஹக்கும், வக்கார் யூனிஸும் கடந்த 2019 செப்டம்பர் மாதம் பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டனர். அவர்களுடைய ஒப்பந்தம் முடிவடைய இன்னும் ஓராண்டு மீதமுள்ள நிலையில், இருவரும் ராஜிநாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.