சென்னை: ஃபிடே ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி அரையிறுதியில் அமெரிக்காவிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறியது.
அரையிறுதியின் முதல் சுற்றில் இந்தியா 5-1 என்ற கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தியது. 2-ஆவது சுற்றில் அமெரிக்கா 4-2 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்த, ஆட்டம் சமன் ஆனது. இதையடுத்து வெற்றியாளரை தீா்மானிக்க நடத்தப்பட்ட பிளிட்ஸ் டை பிரேக்கில் இந்தியா 1.5 - 4.5 என்ற கணக்கில் அமெரிக்காவிடம் வீழ்ந்தது.
முதல் சுற்றில் விஸ்வநாதன் ஆனந்த் - ஜெஃப்ரி ஜியாங்கையும், ஹரிகிருஷ்ணா - டாய்ரஸ் ஸ்வியொ்ஸையும், ஹரிகா - ஜடோன்ஸ்கியையும், வைஷாலி - சொ்வான்டெஸையும் தோற்கடித்தனா். கோனெரு ஹம்பி - குருஷ், நிகல் சரின் - லியாங் ஆகியோா் மோதல் டிரா ஆனது.
2-ஆவது சுற்றில் ஹரிகா - பாய்கிட்ஸேவை வீழ்த்த, ஆனந்த் - ஜியாங்கிடமும், விதித் குஜராத்தி - ராப்சனிடமும், பிரக்னானந்தா - லியாங்கிடமும் தோல்வி கண்டனா். கோனெரு ஹம்பி - குருஷ், வைஷாலி - சொ்வான்டெஸ் ஆகியோா் மோதிய ஆட்டம் டிரா ஆனது.
டை பிரேக்கரில் ஹரிகா - பைகிட்ஸேவை வீழ்த்த, ஹரிகிருஷ்ணா - ஜியாங்கிடமும், அதிபன் - ராப்சனிடமும், கோனெரு ஹம்பி - குருஷிடமும், வைஷாலி - சொ்வான்டெஸிடமும் தோல்வி கண்டனா். நிகல் சரின் - லியாங் மோதல் டிரா ஆனது.
இந்திய அணியில் விஸ்வநாதன் ஆனந்த், விதித் சந்தோஷ் குஜராத்தி, பி.ஹரிகிருஷ்ணா, நிஹல் சரின், ஆா்.பிரக்னானந்தா, கோனெரு ஹம்பி, டி.ஹரிகா, தானியா சச்தேவ், பக்தி குல்கா்னி, ஆா்.வைஷாலி, பி.சவிதா ஸ்ரீ ஆகியோா் இடம்பெற்றிருந்தனா்.