துணை கேப்டனாக இந்த வீரரைத் தேர்வு செய்யலாம்: கவாஸ்கர்

ஐபிஎல் போட்டியிலும் ஒருநாள் கிரிக்கெட்டிலும் திறமையை நன்கு வெளிப்படுத்துகிறார்.
துணை கேப்டனாக இந்த வீரரைத் தேர்வு செய்யலாம்: கவாஸ்கர்

கே.எல். ராகுலை துணை கேப்டனாகத் தேர்வு செய்ய வேண்டும் என்று முன்னாள் வீரர் கவாஸ்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக விராட் கோலி நேற்று அறிவித்தார். 

பிரபல பேட்ஸ்மேனான விராட் கோலி, இந்திய அணியின் கேப்டனாக நீடித்து வருகிறார். எனினும் இதுவரை ஒரு ஐசிசி கோப்பையையும் அவரால் வெல்ல முடியவில்லை. இதனால் ஏராளமான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார். இந்திய டெஸ்ட், ஒருநாள் அணிகளை வழிநடத்த டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன். இந்திய அணிக்காகத் தொடர்ந்து என்னுடைய திறமையை வெளிப்படுத்துவேன் என்று கோலி கூறியுள்ளார். 

இந்நிலையில் டி20 கேப்டன் பதவியிலிருந்து கோலி விலகுவது பற்றி ஒரு பேட்டியில் முன்னாள் வீரர் கவாஸ்கர் கூறியதாவது:

எதிர்காலத் திட்டத்துடன் பிசிசிஐ செயல்படுவது நல்ல விஷயம். புதிய கேப்டனை உருவாக்க எண்ணினால் கே.எல். ராகுலைப் பரிசீலனை செய்யலாம். அவர் நன்றாக விளையாடி வருகிறார். இங்கிலாந்திலும் அவருடைய பேட்டிங் சிறப்பாக இருந்தது. ஐபிஎல் போட்டியிலும் ஒருநாள் கிரிக்கெட்டிலும் திறமையை நன்கு வெளிப்படுத்துகிறார். எனவே அவரை துணை கேப்டனாக அறிவிக்கலாம் என்று கூறியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com