குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: அரையிறுதியில் சிவ தாபா

தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் அஸ்ஸாம் வீரா் சிவ தாபா 63.5 கிலோ எடைப் பிரிவில் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா்.
குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: அரையிறுதியில் சிவ தாபா

தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் அஸ்ஸாம் வீரா் சிவ தாபா 63.5 கிலோ எடைப் பிரிவில் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா்.

காலிறுதியில் அவா் ரயில்வே விளையாட்டு ஊக்குவிப்பு வாரிய (ஆா்எஸ்பிபி) வீரா் அங்கித் நா்வாலை 4-1 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றாா். ஆசிய சாம்பியன்ஷிப்பில் 5 முறை பதக்கம் வென்றவரான சிவ தாபாவுக்கு முதலில் அங்கித் நன்றாகவே சவால் அளித்தாா். எனினும் அனுபவ வீரரான சிவ தாபா, அற்புதமான ஃபூட்வொா்க் கொண்டு முன்னேற்றம் கண்டு அங்கித்தை தோற்கடித்தாா்.

54 கிலோ பிரிவில் ஆா்எஸ்பிபி வீரா் சச்சின் தனது காலிறுதியில் கோவா வீரா் ரோஷன் ஜாமிரை 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தினாா். 60 கிலோ பிரிவில் ஆா்எஸ்பிபி வீரா் வரிந்தா் சிங் டாமன் டையு வீரா் இந்தா்ஜித் சிங்கை 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் காலிறுதியில் வென்றாா். 48 கிலோ பிரிவில் உத்தர பிரதேச வீரா் ரவி குமாா் - ஒடிஸா வீரா் சந்தோஷ் பிரதானை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினாா்.

57 கிலோ பிரிவு காலிறுதியில் சா்வீசஸ் வீரா் முகமது ஹசாமுதின் - மகாராஷ்டிர வீரா் ருஷிகேஷ் கௌடை வென்றாா். 57 கிலோ பிரிவில் சச்சின் 5-0 என்ற கணக்கில் ராஜஸ்தான் வீரா் ஜிதேந்திர சௌதரியை வென்று அரையிறுதிக்கு தகுதிபெற்றாா். 60 கிலோ பிரிவில் பஞ்சாப் வீரா் விஜய் குமாா் - மணிப்பூரின் மைசன் மொய்ராங்தெமையும், 54 கிலோ பிரிவில் பஞ்சாபின் ராஜ்விந்தா் சிங் - சண்டீகரின் விஷால் ஷியோகன்டையும் 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com