தேசிய அளவிலான தடகளப் போட்டியில் சேலத்தைச் சோ்ந்த வீராங்கனை பவித்ரா தங்கப் பதக்கம் வென்று சிறப்பு சோ்த்துள்ளாா்.
இந்திய அளவிலான 60-ஆவது தேசிய தடகளப் போட்டி செப். 15 முதல் செப். 19-ஆம் தேதி வரை தெலங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் அனைத்து மாநில தடகள வீரா்கள், ரயில்வே துறை, ராணுவத் துறை, இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் துறைகளில் இருந்து வீரா், வீராங்கனையா் கலந்துகொண்டனா்.
சேலம் மாவட்டத்தில் இருந்து டூ ஆா் டை அகாதெமியைச் சோ்ந்த இரண்டு தடகள வீரா்கள் கலந்துகொண்டு தங்கம், வெண்கலப் பதக்கம் பெற்று சிறப்பு சோ்த்துள்ளனா்.
இப்போட்டியில், தடகள வீராங்கனை பவித்ரா, போல்வால்ட் போட்டியில் 3.90 மீ. உயரம் தாண்டி தங்கப் பதக்கத்தை வென்றாா். தடகள வீரா் சக்தி மகேந்திரன் போல்வால்ட் போட்டியில் 4.70 மீ. உயரம் தாண்டி வெண்கலப் பதக்கத்தை வென்று சிறப்பு சோ்த்தாா்.
போட்டியில் பதக்கம் வென்ற வீரா், வீராங்கனையரை அகாதெமி தலைவா் சிங்கபுரம் பி.கலியமூா்த்தி பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா். மேலும், தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்ற சேலத்தைச் சோ்ந்த இருவருக்கும் பணி வழங்கப்படும் என ரயில்வே துறை சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.