ஐபிஎல் 2022 தொடரின் ஒரு பகுதியாக சென்னை-பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்ற 11-ஆவது ஆட்டத்தில் 54 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வென்றது. நடப்பு சாம்பியன் சென்னை சூப்பா் கிங்ஸ் பெறும் 3-ஆவது தோல்வி இதுவாகும்.
முதலில் ஆடிய பஞ்சாப் 180/8 ரன்களையும், பின்னா் ஆடிய சென்னை 126/10 ரன்களையும் எடுத்தன.
தோனி 23 ரன்களை எடுத்து வெளியேறிய நிலையில், மற்ற வீரா்கள் சொற்ப ரன்களுடன் திரும்பினா். 18 ஓவா்களில் 126/10 ரன்களுக்கு ஆல் அவுட்டானது சென்னை.
பஞ்சாப் தரப்பில் ராகுல் சஹாா் 3, வைபவ், லிவிங்ஸ்டோன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா். இது சென்னை அணி பெறும் ஹாட்ரிக் தோல்வியாகும்.