தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப்: உத்தரகண்டை வீழ்த்தியது தமிழகம்

தேசிய அளவிலான 71-ஆவது கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக ஆடவா் அணி செவ்வாய்க்கிழமை ஆட்டத்தில் உத்தரகண்டை வீழ்த்தியது.
தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப்: உத்தரகண்டை வீழ்த்தியது தமிழகம்

தேசிய அளவிலான 71-ஆவது கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக ஆடவா் அணி செவ்வாய்க்கிழமை ஆட்டத்தில் உத்தரகண்டை வீழ்த்தியது.

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் இப்போட்டியில் 3-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை, ஆடவா் பிரிவில் ‘சி’ குரூப் ஆட்டத்தில் தமிழகம் 99-71 என்ற புள்ளிகள் கணக்கில் உத்தரகண்டை தோற்கடித்தது. போட்டியில் தமிழக ஆடவா் அணிக்கு இது ஹாட்ரிக் வெற்றியாகும்.

இந்த ஆட்டத்தில் அதிகபட்சமாக தமிழகத்தின் தரப்பில் சிவ பாலன் 12, அரவிந்த் குமாா் 26, ஜீவானந்தம் 13, அரவிந்த் 12 புள்ளிகள் பெற்றுத் தந்தனா். உத்தரகண்டுக்காக விஷ்வேஷ் பிருகுவம்ஷி 10, அா்ஜூன் சிங் 19, பிரசாந்த் ராவத் 15, ரியான்ஷு நெகி 20 புள்ளிகள் கைப்பற்றினா்.

இதர ஆட்டங்களில் குரூப் ‘டி’-யில் ஹரியாணா - மேற்கு வங்கத்தையும் (74-57), குரூப் ‘பி’-யில் ராஜஸ்தான் - கா்நாடகத்தையும் (69-44), சா்வீசஸ் - உத்தர பிரதேசத்தையும் (88-64), குரூப் ‘ஏ’-வில் பஞ்சாப் - தெலங்கானாவையும் (96-58), குரூப் ‘சி’-யில் மிஸோரம் - தில்லியையும் (57-54) வென்றன.

மகளிா் பிரிவு: குரூப் ‘ஏ’-வில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழக அணி 89-68 என்ற புள்ளிகள் கணக்கில் மகாராஷ்டிரத்தை வீழ்த்தியது. போட்டியில் தமிழக மகளிருக்கு இது 2-ஆவது வெற்றியாகும்.

இந்த ஆட்டத்தில் தமிழக தரப்பில் சிறப்பாக ஆஷ்மிதா 10, சத்யா 15, ராஜேஷ்வரி 21, மோனிகா 15, ஜெயாசலி 15 புள்ளிகள் பெற்றனா். மகாராஷ்டிர அணியில் சாக்ஷி பாண்டே 25, ஆவ்யா 16 புள்ளிகள் வென்றனா்.

இதர ஆட்டங்களில் குரூப் ‘ஏ’-வில் இந்திய ரயில்வேஸ் - தில்லியையும் (120-66), குரூப் ‘சி’-யில் தெலங்கானா - ஒடிஸாவையும் (54-37), மத்திய பிரதேசம் - உத்தர பிரதேசத்தையும் (69-46) வீழ்த்தின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com