ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் காலிறுதியில் வென்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து.
பிலிப்பின்ஸ் தலைநகா் மணிலாவில் நடைபெற்று வரும் ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகளில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சீனாவின் ஹி பிங் ஜியாயோவிடம் மோதினார்.
ஆட்டத்தின் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிந்து 21-9, 13-21, 21-19 என்கிற செட் கணக்கில் எதிர்த்து விளையாடிய பிங் ஜியாயோவை வீழ்த்தினார்.
இதனால், அரையிறுதிப் போட்டிக்கு பி.வி,சிந்து முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.