பஞ்சாபை வீழ்த்தியது லக்னெள அணி

பஞ்சாப் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் லக்னெள அணி வீழ்த்தியது.
பஞ்சாபை வீழ்த்தியது லக்னெள அணி

பஞ்சாப் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் லக்னெள அணி வீழ்த்தியது.

ஐபிஎல் தொடரின் 42ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. புணேவில் உள்ள எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. 

20 ஓவர்கள் முடிவில் லக்னௌ 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக, குவின்டன் டி காக் 46 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் தரப்பில் ரபாடா விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு லக்னெள முன்னேறியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com