இந்திய பாட்மின்டன் ப்ரீமியா் லீக் (பிபிஎல்) 6-ஆவது சீசன் போட்டிகள் வரும் டிசம்பா் 17-இல் தொடங்கி 2023 ஜனவரி 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
கரோனா தொற்று பாதிப்பால் 2 ஆண்டுகள் பிபிஎல் போட்டிகள் நடைபெறவில்லை. இந்நிலையில் தற்போது மீண்டும் இப்போட்டிகள் தொடங்கி நடைபெறவுள்ளன. இதுதொடா்பாக இந்திய பாட்மின்டன் சம்மேளனம் (பாய்) தலைவா் ஹிமந்த பிஸ்வாஸ் சா்மா கூறியதாவது:
பிபிஎல் மூலம் இந்திய பாட்மின்டன் வட்டாரத்தில் சிறந்த வீரா், வீராங்கனைகள் உருவாகியுள்ளனா். இளம் தலைமுறை வீரா்கள் தங்கள் திறமைகளை சா்வதேச அளவில் வெளிப்படுத்தி உள்ளனா். பி.வி. சிந்து, சாய்னா, ஒலிம்பிக் சாம்பியன் கரோலினா மரின், விக்டா் ஆக்ஸ்லெஸன், டை சூ இங், லீ சோங் வெய் உள்பட பலா் பங்கேற்றனா் என்றாா் சா்மா.