காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் தேர்வாகியுள்ளது.
பா்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டியில் முதன்முதலாக டி20 முறையில் மகளிா் கிரிக்கெட் ஆட்டங்கள் நடத்தப்படுகிறது. இந்தியா உள்பட 8 அணிகள் இதில் ஆடுகின்றன. 5 முறை உலக சாம்பியன் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், பாா்படோஸ் அணிகளுடன் ஏ பிரிவில் இந்தியா விளையாடியது.
முதல் அரையிறுதிப் போடியில் இந்திய அணி இங்கிலாந்து அணியிடம் 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்து அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தியா- ஆஸி. அணிகள் இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளது.
இறுதிப் போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 9.30 மணிக்கு எட்ஜ்பாட்ஸனில் நடைபெறுகிறது. இப்போட்டியை சோனி தொலைக்காட்சியில் நேரலையாக பார்க்கலாம்.