மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஏற்கனவே 3-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி விட்டது.
இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 7) இரு அணிகளுக்கும் இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெறுகிறது.
இன்று நடைபெறும் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விளையாடவில்லை. இன்றையப் போட்டியில் இந்திய அணியினை ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா வழிநடத்துகிறார்.