கிரிக்கெட்டில் மற்ற அணிகளைப் போன்று இந்திய மகளிர் கிரிக்கெட் அணியும் திறமை வாய்ந்ததுதான் என மகளிர் கிரிக்கெட் பேட்டர் யாஷ்டிகா பாட்டியா தெரிவித்துள்ளார்.
காமன்வெல்த் தொடரில் இங்கிலாந்து அணியுடனான போட்டியில், பேட்டர்களுக்கு எதிராகவும், பந்து வீச்சாளர்களுக்கு எதிராகவும் சிலத் திட்டங்களை வைத்திருந்ததாகக் குறிப்பிட்டார்.
மேலும், தொடர்ந்து பேசிய யாஷ்டிகா பாட்டியா, விளையாட்டின்போது திடலில் திட்டங்களை செயல்படுத்துவதைப் பொறுத்தது. மற்ற அணிகளைப் போன்று இந்திய அணியும் திறமையானது. மிக நெருக்கடியான சூழலில் நரம்புகளைக் கட்டுக்குள் வைத்திருப்பது போன்றது எனக் குறிப்பிட்டார்.