ஜிம்பாப்வே ஒருநாள்: சச்சின் சாதனையை முறியடித்த ஷுப்மன் கில்!

ஜிம்பாப்வே அணிக்கு எதிராகச் சதமடித்த இந்திய இளம் வீரர் ஷுப்மன் கில், புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
ஜிம்பாப்வே ஒருநாள்: சச்சின் சாதனையை முறியடித்த ஷுப்மன் கில்!

ஜிம்பாப்வே அணிக்கு எதிராகச் சதமடித்த இந்திய இளம் வீரர் ஷுப்மன் கில், புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோதும் 3-வது ஒருநாள் ஆட்டம் ஹராரேவில் இன்று நடைபெற்று வருகிறது. இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்துள்ளது. சிறப்பாக விளையாடிய 22 வயது ஷுப்மன் கில், 130 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 97 பந்துகளில் 1 சிக்ஸர், 15 பவுண்டரிகள் அடித்தார். இது அவருடைய முதல் ஒருநாள் சதம்.

இந்நிலையில் ஜிம்பாப்வே நாட்டில் அதிக ஒருநாள் ரன்களை எடுத்த இந்திய வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் ஷுப்மன் கில். இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர், 1998-ல் 127* ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. அச்சாதனையை ஷுப்மன் கில் இன்று தாண்டியுள்ளார்.

ஜிம்பாப்வே நாட்டில் அதிக ஒருநாள் ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள்

130 - ஷுப்மன் கில், 2022 
127* - சச்சின் டெண்டுல்கர், 1998
124* - ராயுடு, 2015
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com