அமெரிக்காவில் நடைபெற்ற எஃப்டிஎக்ஸ் கிரிப்டோ கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா கடைசி சுற்றில் உலகின் நம்பர் 1 வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்செனை வீழ்த்தினார்.
போட்டியின் முடிவில் 16 புள்ளிகளுடன் கார்ல்சென் முதலிடம் பிடிக்க, பிரக்ஞானந்தா 2 தோல்விகள் மட்டும் கண்டு 15 புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பிடித்தார். முதலிடத்தை இழந்தாலும், கார்ல்செனை 3-ஆவது முறையாக வீழ்த்தி அசத்தியிருக்கிறார் பிரக்ஞானந்தார். ஏற்கெனவே இரு முறை ஆன்லைன் போட்டிகளில் பிரக்ஞானந்தா அவரை வென்றிருந்தார்.
இந்நிலையில், இந்தப் போட்டியின் கடைசி சுற்றில் பிரக்ஞானந்தா - கார்ல்சென் விளையாடினர். அதில் முதல் இரு கேம்கள் டிரா ஆக, 3-ஆவது கேமை கார்ல்சென் கைப்பற்றினார். எனினும், 4-ஆவது கேமை பிரக்ஞானந்தா வென்று ஆட்டத்தை டை பிரேக்கருக்கு நகர்த்தினார். பிலிட்ஸ் முறையிலான அந்த இரு டை பிரேக்கரையும் வென்று கார்ல்செனுக்கு அதிர்ச்சி அளித்தார் பிரக்ஞானந்தார்.