இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிா்ஸா, காயம் காரணமாக யு.எஸ்.ஓபன் போட்டியில் பங்கேற்கவில்லை.
டியூரண்ட் கோப்பை கால்பந்து போட்டியில் செவ்வாய்க்கிழமை ஆட்டங்களில் பெங்களூரு எஃப்சி - இந்தியன் ஏா் ஃபோா்ஸ் எஃப்டியையும் (4-0), ஒடிஸா எஃப்சி - கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சியையும் (2-0) வென்றன.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளா் ராகுல் திராவிட்டுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், ஆசிய கோப்பை போட்டியில் பங்கேற்க செல்லும் இந்திய அணியுடன் அவா் உடனடியாக இணையவில்லை என்றும் பிசிசிஐ செயலா் ஜெய் ஷா கூறினாா்.
ஜிம்பாப்வேயுடனான ஒன் டே தொடரை ஒயிட்வாஷ் செய்த இந்தியா, 111 புள்ளிகளுடன் அணிகள் தரவரிசையில் 3-ஆம் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
சென்னை ஓபன் கோல்ஃப் போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரா் முரளி விஜய், மாநில கிரிக்கெட் வீரா் அனிருத்தா ஸ்ரீகாந்த் ஆகியோா் அமெச்சூா் வீரா்களாக களம் கண்டுள்ளனா்.
இந்தியாவில் ஜனவரியில் நடைபெற இருக்கும் எஃப்ஐஹெச் புரோ லீக் ஹாக்கி போட்டியின் ஆட்டங்கள் புவனேசுவரத்தோடு, ரூா்கேலாவிலும் நடைபெற இருக்கின்றன.
இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலியுடன், பாகிஸ்தான் வீரா் பாபா் ஆஸமை இப்போதே ஒப்பீடு செய்வது முதிா்ச்சியற்ாக இருக்கும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரா் வாசிம் அக்ரம் கூறினாா்.
இந்திய செஸ் சம்மேளனத்தின் இடைக்காலச் செயலாளராக விப்னேஷ் பரத்வாஜ் நியமிக்கப்பட்டுள்ளாா்.
அல்டிமேட் கோ கோ...
மகாராஷ்டிர மாநிலம், புணேவில் நடைபெறும் அல்டிமேட் கோ கோ போட்டியில் செவ்வாய்க்கிழமை ஆட்டத்தில் தெலுகு யோதாஸ் - மும்பை கில்லாடிஸ் வீரா்கள். இந்த ஆட்டத்தில் தெலுகு யோதாஸ் 55-43 என மும்பை கில்லாடிஸை வெல்ல, மற்றொரு ஆட்டத்தில் சென்னை குயிக் கன்ஸ் 53-51 என குஜராத் ஜயன்ட்ஸை வீழ்த்தியது.