இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஆசியக் கோப்பை டி-20யின் இன்றைய (புதன்கிழமை) ஆட்டத்தில் இந்தியா, ஹாங்காங் அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற ஹாங்காங் அணியின் கேப்டன் நிசாகத் கான் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இந்திய அணியில் ஹார்திக் பாண்டியாவுக்கு ஓய்வளிக்கப்பட்டு, ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி குரூப் ஏ வில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.