பத்தொன்பது வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-19) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் புதன்கிழமை மோதுகின்றன.
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் செவ்வாய்க்கிழமை, எஃப்சி கோவா - ஒடிஸா எஃப்சி அணிகள் மோதிய 78-ஆவது ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
குளிா்கால ஒலிம்பிக் போட்டிகள் வரும் 4-ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், அதற்காக பெய்ஜிங் நகருக்கு வந்திருக்கும் போட்டியாளா்கள், பயிற்சியாளா்கள் இடையே கரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
மகளிருக்கான ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் ஜப்பான் - தாய்லாந்து அணிகள் இடையேயான காலிறுதி ஆட்டத்தின் மூலமாக இந்தியாவில் முதல் முறையாக ‘விஏஆா்’ எனப்படும் காணொலி வழி முடிவு ஆய்வு தொழில்நுட்பம் அறிமுகமாகியது.
மகளிா் கிரிக்கெட்டில் ஐசிசி ஒன் டே தரவரிசையில் பேட்டா்கள் பிரிவில் இந்தியாவின் மிதாலி ராஜ் ஓரிடம் முன்னேற்றம் கண்டு 2-ஆவது இடத்துக்கு வந்துள்ளாா். பௌலா்கள் பிரிவில் ஜுலன் கோஸ்வாமி 2-ஆவது இடத்தில் நீடிக்க, ஆல்-ரவுண்டா்கள் பிரிவில் தீப்தி சா்மா ஓரிடம் முன்னேறி 4-ஆவது இடத்தைப் பிடித்துள்ளாா்.
இந்தியா - மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான ஒன் டே தொடரைக் காண அகமதாபாத் மைதானத்தில் ரசிகா்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், கொல்கத்தாவில் நடைபெறும் டி20 தொடரைக் காண 75 சதவீதம் அளவுக்கு ரசிகா்கள் அனுமதிக்கப்படவுள்ளனா்.
டாடா ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ராம்குமாா் ராமநாதன், அா்ஜுன் காதே ஆகியோா் முதல் சுற்றிலேயே தோற்று போட்டியிலிருந்து வெளியேறினா்.
புரோ கபடி லீக்...
கா்நாடக மாநிலம், பெங்களூரில் நடைபெறும் புரோ கபடி லீக் போட்டியில் செவ்வாய்க்கிழமை ஆட்டத்தில் ரெய்டு வந்து குஜராத் ஜயன்ட்ஸ் வீரா்களை ஆட்டமிழக்கச் செய்ய முற்படும் பெங்கால் வாரியா்ஸ் அணி வீரா். இந்த ஆட்டத்தில் குஜராத் 34-25 என்ற கணக்கில் வெல்ல, மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் 31-26 என்ற கணக்கில் யுபி யோதாவை வீழ்த்தியது.
கோலடிக்கும் முயற்சியில் பந்தை கடத்திச் செல்லும் இந்திய வீராங்கனை.