மே.இ. தீவுகள் அணிக்கு எதிரான டி-20 தொடரில் இருந்து கே.எல்.ராகுல், அக்ஷர் படேல் விலகியுள்ளனர்.
மே.இ. தீவுகள் அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. ஏற்கெனவே 2 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றியது. இன்று 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது.
இதையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் பிப்ரவரி 16ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. இந்த நிலையில் காயம் காரணமாக மே.இ. தீவுகள் அணிக்கு எதிரான டி-20 தொடரில் இருந்து கே.எல்.ராகுல், அக்ஷர் படேல் ஆகியோர் விலகியுள்ளனர்.
இவ்வீரர்களுக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட், தீபக் ஹூடா ஆகியோர் மாற்று வீரர்களாக அணியில் இடம்பெற்றுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.