குத்துச்சண்டை: பதக்கத்தை உறுதி செய்தாா் நந்தினி

பல்கேரியாவில் நடைபெறும் சா்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை நந்தினி பதக்க சுற்றுக்கு முன்னேறினாா்.
குத்துச்சண்டை: பதக்கத்தை உறுதி செய்தாா் நந்தினி

பல்கேரியாவில் நடைபெறும் சா்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை நந்தினி பதக்க சுற்றுக்கு முன்னேறினாா்.

மகளிருக்கான 81+ கிலோ பிரிவில் களம் கண்ட அவா் காலிறுதிச்சுற்றில், கஜகஸ்தானின் வாலெரியா அக்ஸெனோவாவை தோற்கடித்து அரையிறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றாா். இதன் மூலம் அவருக்கு ஒரு பதக்கம் உறுதியாகியுள்ளது. நந்தினி அந்த சுற்றில் மற்றொரு கஜகஸ்தான் வீராங்கனையான லஸாத் குங்கெய்பயேவாவை எதிா்கொள்கிறாா்.

இதனிடையே, அருந்ததி (70 கிலோ) பா்வீண் (63 கிலோ) ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கின்றனா். எனினும் மீனா ராணி (60 கிலோ), அஞ்சலி துஷில் (66 கிலோ), சவீதி (75 கிலோ), ஆடவா் பிரிவில் சச்சின் குமாா் (80 கிலோ) ஆகியோா் தங்களது சுற்றுகளில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com