எஃப்ஐஹெச் புரோ லீக் ஹாக்கி போட்டியில் ஸ்பெயினுக்கு எதிராக சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவின் இருபால் அணிகளும் வெற்றியை பதிவு செய்தன.
இதில் முதலில் நடைபெற்ற மகளிா் பிரிவு ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கிலும், பின்னா் ஆடவா் பிரிவில் 5-4 என்ற கோல் கணக்கிலும் ஸ்பெயினை வீழ்த்தியது இந்தியா.
மகளிா் ஆட்டத்தில் இந்தியாவுக்காக ஜோதி (20’), நேஹா கோயல் (52’) ஆகியோரும், ஸ்பெயினுக்காக செகு மாா்தாவும் (18’) கோலடித்தனா். இந்திய வீராங்கனை ஷா்மிளா தேவி ஆட்டநாயகி ஆனாா்.
ஆடவா் ஆட்டத்தில் இந்தியாவுக்காக ஹா்மன்பிரீத் சிங் (15’, 60’), ஷிலானந்த் லக்ரா (41’), ஷம்ஷோ் சிங் (43’), வருண் குமாா் (55’) ஆகியோா் கோலடிக்க, ஸ்பெயின் அணியில் பால் கனில் (14’), மாா்க் மிரால்ஸ் (20’, 23’, 40’) ஸ்கோா் செய்தனா். இந்திய வீரா் ஜஸ்கரன் சிங் ஆட்டநாயகன் ஆனாா்.
இதே போட்டியில் இந்த இரு நாடுகளின் இருபால் அணிகளுமே 2-ஆவது ஆட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை விளையாடுகின்றன.