புரோ கபடி லீக் 8-ஆவது சீசன் போட்டியின் ஒரு பகுதியாக பெங்களூருவில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் 4 முறை சாம்பியன் பாட்னா பைரேட்ஸ் அணியை கடும் சவாலுக்கு இடையே 37-36 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது தபாங் தில்லி அணி.
இதன் மூலம் தில்லி அணிக்கு ரூ.3 கோடியும், பாட்னா அணிக்கு ரூ.1.8 கோடியும் பரிசுத் தொகையாக கிடைத்தன.