தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்திய அணி முதல் நாள் உணவு இடைவேளையின்போது 2 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. செஞ்சுரியனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகித்தது. எனினும் ஜொகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற 2-வது டெஸ்டை தென்னாப்பிரிக்க அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்தது. 3-வது டெஸ்ட், கேப் டவுனில் இன்று தொடங்கியுள்ளது.
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஹனுமா விஹாரிக்குப் பதிலாக விராட் கோலியும் சிராஜுக்குப் பதிலாக உமேஷ் யாதவும் இந்திய அணியில் இடம்பிடித்தார்கள். தெ.ஆ. அணியில் மாற்றம் எதுவுமில்லை.
பந்துவீச்சுக்குச் சாதகமான சூழலில் தெ.ஆ. பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டார்கள். இதனால் 12 ரன்களில் ஆலிவியரிடம் கே.எல். ராகுலும் 15 ரன்களில் ரபாடாவிடம் மயங்க் அகர்வாலும் வீழ்ந்தார்கள். இதன்பிறகு புஜாராவும் கோலியும் பொறுப்புடன் விளையாடினார்கள். புஜாரா 4 பவுண்டரிகள் அடித்து சுறுசுறுப்பாக இயங்கினார்.
இந்திய அணி முதல் நாள் உணவு இடைவேளையின்போது 28 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 26, கோலி 15 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.
ஆடுகளத்தில் மீண்டும் மோதும் இந்தியா, பாகிஸ்தான்?: ரமீஸ் ராஜா முயற்சி
ஐபிஎல் விளம்பரதாரர்கள்: டிஎல்எஃப் முதல் டாடா வரை!
ராஸ் டெய்லர்: கடைசி டெஸ்ட் நாளின் உணர்வுபூர்வமான தருணங்கள் (புகைப்படங்கள்)
கேப் டவுன் டெஸ்ட்: இந்தியா முதலில் பேட்டிங், அணியில் இரு மாற்றங்கள்
பிரபல தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் திடீர் ஓய்வு அறிவிப்பு