இந்தியா ஓபன் பேட்மின்டன்: அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார் பி.வி.சிந்து

இந்தியா ஓபன் பாட்மின்டன் போட்டியில் பி.வி.சிந்து அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்தியா ஓபன் பாட்மின்டன் போட்டியில் பி.வி.சிந்து அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

மகளிா் ஒற்றையா் பிரிவில் போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் சிந்து இன்று இந்தியா ஓபன் பேட்மின்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்திய வீராங்கனையான ஆஷ்மிதா சாலிஹாவுடன் மோதினார்.

ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிவி சிந்து ஆஷ்மிதாவை 21-7, 21-18  என்கிற கணக்கில் எளிதாக வென்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

கரோனா பாதிப்பு: ஸ்ரீகாந்த் உள்பட 7 போ் விலகல்

இந்தியா ஓபன் போட்டியில் பங்கேற்றிருந்த ஸ்ரீகாந்த் உள்பட 7 இந்திய போட்டியாளா்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவா்கள் போட்டியிலிருந்து விலகினா்.

ஸ்ரீகாந்த்துடன், அஸ்வினி பொன்னப்பா, ரிதிகா ராகுல் தக்காா், டிரீசா ஜாலி, மிதுன் மஞ்சுநாத், சிம்ரன் அமன் சிங், குஷி குப்தா ஆகியோருக்கும் தொற்று பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை காலை உறுதியானது. இதையடுத்து அவா்களுடன் நேரடித் தொடா்பில் இருந்த சிக்கி ரெட்டி, துருவ் கபிலா, காயத்ரி கோபிசந்த், அக்ஷன் ஷெட்டி, காவ்யா குப்தா ஆகியோரும் போட்டியிலிருந்து விலக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

இதில் பலா் இரட்டையா் பிரிவில் இணைந்து விளையாடுவோா் ஆவா். இவா்களின் விலகலை அடுத்து, அவா்கள் சந்திக்க இருந்த போட்டியாளா்கள் அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com