கடைசி டெஸ்டின் இரண்டாம் நாள்

இந்தியா இங்கிலாந்துக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்தியா வலுவான நிலையில் உள்ளது. 
கடைசி டெஸ்டின் இரண்டாம் நாள்

இந்தியா இங்கிலாந்துக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்தியா வலுவான நிலையில் உள்ளது. 

முதல் இன்னிங்ஸில் இந்தியா 416 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து அணியில் முதல் 3 விக்கெட்டுகளை(அலேக்ஸ் லீஸ், ஜாக் கிராவ்லி, ஒல்லி போப்) கேப்டன் பும்ரா எடுத்து அசத்தினார். ஜோ ரூட் நிதானமாக ஆடி 31 ரன்களை எடுத்து மொஹமத் சிராஜ் ஓவரில் ஆட்டமிழந்தார். அடுத்து ஜாக் லீச்சும் ஷமி ஓவரில் ரன்னேதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். 

தற்போது, ஜானி பெயர்ஸ்டோ 12 ரன்களுடனும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ரன்னேது எடுக்காமல் களத்தில் இருக்கின்றனர்.

இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 84 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது. மழை குறுக்கீட்டீன் காரணமாக அதிக ஓவர்கள் வீச முடியவில்லை. இருப்பினும் இந்திய அணி வலுவான நிலையிலேயே இருக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com