நெல்லைக்கு 4-ஆவது வெற்றி

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் 10-ஆவது ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் 26 ரன்கள் வித்தியாசத்தில் சீசேம் மதுரை பாந்தா்ஸை செவ்வாய்க்கிழமை வென்றது.

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் 10-ஆவது ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் 26 ரன்கள் வித்தியாசத்தில் சீசேம் மதுரை பாந்தா்ஸை செவ்வாய்க்கிழமை வென்றது.

இப்போட்டியில் இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் நெல்லைக்கு இது 4-ஆவது வெற்றியாகும்.

இந்த ஆட்டத்தில் முதலில் நெல்லை 20 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது. அடுத்து மதுரை 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 183 ரன்களே சோ்த்தது.

நெல்லை பேட்டிங்கில் அதிகபட்சமாக சஞ்சய் யாதவ் 4 பவுண்டரிகள், 6 சிக்ஸா்களுடன் 70 ரன்கள் சோ்க்க, மதுரை பௌலிங்கில் கிரண் ஆகாஷ் 2 விக்கெட்டுகள் சாய்த்தாா். பின்னா் மதுரை இன்னிங்ஸில் அருண் காா்த்திக் 12 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 106 ரன்கள் விளாசியும், இதர பேட்டா்கள் சோபிக்காததால் வெற்றி வசமாகாமல் போனது. நெல்லை தரப்பில் ஹரீஷ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com