விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவின் சாம்பின் பட்டத்தை கஜகஸ்தான் நாட்டின் எலெனா ரைபகினா வென்றுள்ளார்.
லண்டனில் நடந்து வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் போட்டி நிறைவடைந்துள்ளது. சனிக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் கஜகஸ்தான் நாட்டின் எலினா ரைபகினாவும், துனிசியாவின் ஒன்ஸ் ஜபீரும் மோதினர்.
இதையும் படிக்க | இன்றும் சொதப்பல் ஆட்டம்: நெருக்கடியில் விராட் கோலி
பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய ரைபகினா 3-6, 6-2, 6-2 செட்களில் ஜபீரை வீழ்த்தினார். இதன்மூலம் முதன்முறையாக ரைபகினா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.