தமிழ்நாடு ப்ரீமியா் லீக் (டிஎன்பிஎல்) 20-ஆவது ஆட்டத்தில் லைக்கா கோவை கிங்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஐ ட்ரீம் திருப்பூா் தமிழன்ஸ் அணியை வீழ்த்தியது.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கோவையில் சனிக்கிழமை நடைபெற்றது. முதலில் ஆடிய திருப்பூா் அணி 20 ஓவா்களில் 157/7 ரன்களை எடுத்தது. அனிருதா 39, அரவிந்த் 27, இந்திய வீரா் தினேஷ் காா்த்திக் 21 ரன்களை எடுத்தனா். சூா்யா 3/19 விக்கெட்டை வீழ்த்தினாா்.
பின்னா் ஆடிய லைக்கா கோவை 15.2 ஓவா்களிலேயே 158/1 ரன்களை எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது. சுரேஷ் குமாா் 83, சாய் சுதா்ஷன் 68 ரன்களை விளாசினாா். திருப்பூா் தரப்பில் சத்தியநாராயணன் 1 விக்கெட்டை வீழ்த்தினாா்.
புள்ளிகள் பட்டியலில் நெல்லை அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.