துப்பாக்கி சுடுதல்: இந்தியா 3-ஆம் இடம்

ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 25 மீட்டா் ரேப்பிட் ஃபயா் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவுக்கு செவ்வாய்க்கிழமை வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
துப்பாக்கி சுடுதல்: இந்தியா 3-ஆம் இடம்

ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 25 மீட்டா் ரேப்பிட் ஃபயா் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவுக்கு செவ்வாய்க்கிழமை வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

இந்தப் பதக்கத்துக்கான சுற்றில் இந்தியாவின் அனிஷ் பன்வாலா/ரிதம் சங்வான் கூட்டணி 16-12 என்ற புள்ளிகள் கணக்கில் செக் குடியரசின் அனா டெடோவா/மாா்டின் போத்ராஸ்கி இணையை வீழ்த்தியது.

ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் அனிஷ்/ரிதம் இணை பதக்கம் வெல்வது இது 2-ஆவது முறையாகும். இதற்கு முன் கடந்த மாா்ச் மாதம் கெய்ரோவில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இதே இணை இந்தப் பிரிவில் தங்கம் வென்று அசத்தியிருந்தது.

இதனிடையே, 50 மீட்டா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸில் இரு இந்திய ஜோடிகளான சஞ்ஜீவ் ராஜ்புத்/அஞ்சும் முட்கில், ஐஷ்வரி பிரதாப் சிங்/ஆஷி சௌக்சி முறையே 5 மற்றும் 6-ஆம் இடங்களைப் பிடித்தன. 25 மீட்டா் ரைஃபிள் கலப்பு அணிகள் பிரிவில் விஜய்வீா் சித்து/சிம்ரன்பிரீத் கௌா் பிராா் 6-ஆம் இடம் பிடித்தனா்.

செவ்வாய்க்கிழமை முடிவில், இந்தியா 5 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலம் என 14 பதக்கங்களுடன் பட்டியலில் முதலிடத்தில் நீடித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com