உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க போவதில்லை என மாக்னஸ் கார்ல்சன் தெரிவித்துள்ளார்.
செஸ் விளையாட்டின் முக்கிய போட்டியான உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் இதுவரை 5 முறை பட்டத்தை வென்றவர் நார்வேயை சேர்ந்த மாக்னஸ் கார்ல்சன்.
இதையும் படிக்க: செஸ் வீரர் பிரக்ஞானந்தாவைச் சந்தித்த சிவகார்த்திகேயன் (படங்கள்)
செஸ் உலகின் நம்.1 வீரரான இவர் மிகக் குறுகிய வயதிலேயே கிராண்ட் மாஸ்டரானவர். இந்நிலையில், தற்போது அடுத்தாண்டு(2023) நடைபெற உள்ள உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க போவதில்லை என அறிவித்துள்ளார்.
மேலும், தனிபட்ட முடிவின் காரணமாகவே போட்டியிலிருந்து விலகுவதாகவும் இதுகுறித்து நிர்வாகத்திடம் முறையாக அறிவித்து விட்டதாகவும் கார்ல்சன் தெரிவித்துள்ளார்.