காமன்வெல்த் போட்டிக்காக 4 ஆண்டுகாலமாக பயிற்சி மேற்கொண்டுள்ளதாக மகளிர் ஹாக்கி அணி கேப்டன் சவிதா புனியா தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை பிர்மிங்காம் பகுதியில் நடைபெறவுள்ளன.
இந்நிலையில் லண்டனில் இது குறித்து பேசிய இந்திய மகளிர் ஹாக்கி அணி கேப்டன் சவிதா புனியா, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் உற்சாகம் அளிக்கிறது. இதற்கான நான்கு ஆண்டுகள் கடுமையாக பயிற்சி செய்துள்ளோம். இடையில் உலகக்கோப்பையும் விளையாடியுள்ளோம்.
ஆனால் இது பலதரப்பட்ட விளையாட்டுகள் நடைபெறும் திருவிழா. இதனால், அனைத்து விளையாட்டு வீரர்களும் உற்சாகமடைந்துள்ளனர். அணியின் கேப்டனான கூடுதல் பொறுப்பு உள்ளது. அணியில் உள்ள அனைவரும் ஒருவருக்கொருவர் பக்கபலமாக உள்ளோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.