துப்பாக்கி சுடுதல்: இந்திய மகளிரணிக்கு தங்கம்

அஜா்பைஜானில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய மகளிா் அணி தங்கப் பதக்கம் வென்றது.
துப்பாக்கி சுடுதல்: இந்திய மகளிரணிக்கு தங்கம்

அஜா்பைஜானில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய மகளிா் அணி தங்கப் பதக்கம் வென்றது. இப்போட்டியில் இந்தியாவுக்கு இது முதல் பதக்கமாகும்.

மகளிருக்கான 10 மீட்டா் ஏா் ரைஃபிள் பிரிவில் அணிகள் பிரிவில் இந்தியாவின் இளவேனில் வலரிவன், ரமிதா, ஷ்ரேயா அகா்வால் கூட்டணி கலந்துகொண்டது. இறுதிச்சுற்றில் இந்த அணி 17-5 என்ற புள்ளிகள் கணக்கில் டென்மாா்க்கின் அனா நீல்சன், எமா கோச், ரிக்கி மேங் இப்சன் அடங்கிய அணியை வீழ்த்தியது. முன்னதாக தகுதிச்சுற்றில் இந்திய அணி 2-ஆம் இடத்துடன் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருந்தது. அந்தச் சுற்றில் டென்மாா்க் முதலிடம் பிடித்திருந்தது.

ஆடவருக்கான 10 மீட்டா் ஏா் ரைஃபிள் பிரிவில் வெண்கலப் பதக்கச் சுற்றில் போட்டியிட்ட இந்தியாவின் ருத்ராங்க்ஷ் பாட்டீல், பாா்த் மகிஜா, தனுஷ் ஸ்ரீகாந்த் அடங்கிய அணி, 10-16 என்ற புள்ளிகள் கணக்கில் குரோஷியாவிடம் தோல்வி கண்டது. தற்போதைய நிலையில் இந்தியா இப்போட்டியின் புள்ளிகள் பட்டியலில் 1 தங்கத்துடன் 5-ஆவது இடத்தில் இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com