இந்திய அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளது.
இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 4வது டி20 போட்டி குஜராத்தில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா பந்துவீச்சினை தேர்வு செய்துள்ளார்.
ஏற்கனவே இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள தென்னாப்பிரிக்கா மூன்றாவது வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்புடனும், இந்த போட்டியில் வென்று தொடரை இழக்காமல் அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்லும் முனைப்பில் இந்திய அணியும் களமிறங்குகின்றன.