இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்-ஹேசல் கீச் தம்பதிக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு ஓரியன் கீச் சிங் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங். இவருக்கும் நடிகையுமான ஹேசல் கீச்சிற்கும் கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி ஃபதேகர் சாஹிப் குருத்வாராவில் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த தம்பதிக்கு கடந்த ஜனவரி மாதம் ஆண் குழந்தை பிறந்தது.
இதையும் படிக்க- முதல்வருக்கு உடல் நலக் குறைவு: நலம்பெற திருமாவளவன் வாழ்த்து
தற்போது இந்த குழந்தைக்கு ஓரியன் கீச் சிங் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. தந்தையர் நாளை முன்னிட்டு யுவராஜ் சிங் இதனை தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 2007-ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை மற்றும் 2011-ஆம் ஆண்டு ஒருநாள் போட்டி உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியில் முக்கிய ஆல் ரவுண்டராக திகழ்ந்தவர் யுவராஜ் சிங்.
பின்னர் இவர் 2019-ஆம் ஆண்டு அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.