மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி

ஆஸ்திரேலியா இலங்கைக்கு இடையேயான 3வது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி

ஆஸ்திரேலியா இலங்கைக்கு இடையேயான 3வது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்களை எடுத்தனர். இதில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 70 ரன்கள், ஆரோன் பின்ச் 62 ரன்கள், அலெக்ஸ் கேரி 49 ரன்கள், மேக்ஸ்வெல் 33 ரன்களும் எடுத்தனர். இலங்கை அணியின் சார்பாக வண்டர்சே 3 விக்கெட்டுகளும் சமீரா, தனஞ்ஜெயா, வெல்லாலகே தலா 1 விக்கெட் எடுத்தனர். 

அடுத்து ஆடிய இலங்கை அணி 48.3 ஓவரில் 292 ரன்களை எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். பதும் நிஷான்கா மற்றும் குஷால் மெண்டிஸ் வலுவான பார்னர்ஷிப் அமைத்து வெற்றிக்கு வித்திட்டனர். இதில் பதும் நிஷான்கா 11 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களுடன் 137 ரன்களை எடுத்து ஆட்ட நாயகன் விருதினைப் பெற்றார். குஷால் மெண்டிஸ் 87 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழாக்காமல் இருந்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். ஆஸ்திரேலியா அணி சார்பில் ரிச்சர்ட்சன் 2 விக்கேட்டுகள், ஹேசல்வுட், மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் 5 போட்டிகளைக் கொண்ட தொடரில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com